புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பம் சாலையில் வட்டிக்கடை நடத்தி வரும் வட மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் சேட் நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர்.
இந்நிலையில், கடந்த மாதம் இவர் இணையத்தில் தேடி கொண்டிருந்தபோது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் ஆன்லைனில் கே.பி.சி (KBC) என்ற ஆன்லைன் கேம்மில் விளையாட அழைப்பு வந்தது.
இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் பெயரில் போலியாக இந்த செயலி இயக்கப்படுகிறது. அமிதாப்பச்சன் நடத்திய “கோன்பனேகா குரோர்பதி” என்ற பெயரில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.
இந்தியில் மட்டுமே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முதல் கேள்வி பதிலளித்தவுடன் 500 ரூபாய் பரிசு அறிவிக்கப்படுகிறது. இரண்டாவது கேள்விக்கு 3,000 ரூபாய் என படிப்படியாக ஐந்தாயிரம் வரை செல்கிறது.
இதையும் படிங்க : ''மகளிடம் இப்படி நடந்துகொள்ளுங்கள்''அறிவுரை கூறிய மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்!
எளிமையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு ஆசையை தூண்டும் வகையில் தங்களுக்கான பரிசு தபால் மூலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
அதே வகையில் சுரேஷுக்கு கொரியர் மூலம் ஒரு கவர் வந்தது. அதில் சுரேஷுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அவர் காரை பெறுவதற்கு ஆசையில் மீண்டும் ஆன்லைன் கேம்முக்குள் சென்றார்.
அப்போது அவருக்கு காருக்கான ஜி.எஸ்.டி வரி, சேவை வரி என பணம் அனுப்புமாறு கேட்டு 40 ஆயிரம் ரூபாய் வரை கரந்துள்ளனர். தங்களது பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 49,500 கட்டினால் கார் வீடு தேடி வரும் என அறிவிப்பு வந்தது.
இதன்பிறகு தான் அவர் விழித்துக்கொண்டு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது தான் ஆன்லைன் கேம் மூலம் பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கியது தெரியவந்தது.
பிரபல நடிகர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கும் தங்களும் சம்பந்தமும் இல்லை என அறிவித்தாலும், ஆன்லைன் மூலம் அவர்களது பெயர்களை பயன்படுத்தி விளையாட்டு என்ற பெயரில் லட்சக்கணக்கில் பலரிடம் மோசடி வசூல் தொடர்கிறது.
இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை கண்காணிப்பாளர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். மேலும் இந்தி மொழி பேசுபவர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து காவல்துறை தீவிர கவனத்தில் கொண்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பணம் இழப்பவர்கள் 2,000 ரூபாய், 3,000 ரூபாய் என மிக குறைவாக இருந்தாலும் அவமானமான கருதி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்காமல் உள்ளனர். இதனால் ஆன்லைனில் பணம் பறிப்பவர்கள் தொடர்ந்து பணத்தை பறித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி செய்தியாளர் - இளவமுதன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Online Frauds, Puducherry