தெற்கு அந்தமான் அருகே உருவானது காற்று அழுத்த தாழ்வு பகுதி. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது மாண்டஸ் புயலாக மாறி உள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரிக்கு இடைப்பட்ட கடலோர பகுதிகளில் 9ஆம் தேதி இரவு அல்லது 10ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது .
இதன்காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் புதுச்சேரி முழுவதும் தூறல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் கூடியிருக்கிறது. அலையும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
Also see... அடுத்த 2 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யக்கூடும்...
வழக்கமாக 3 முதல் 4 அடி வரை உயர்ந்து காணப்படும் அலையின் உயரம் தற்போது 8 முதல் 15 அடி வரை உயர்ந்து ஆக்ரோஷமாக வீசிகிறது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
காந்தி சிலை, பழைய துறைமுகத்தில் உடைந்த பாலம், தேங்காய்திட்டு துறைமுகம், பாண்டி மெரினா, கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளில் மக்கள் வந்து குளிர்ந்த காற்றையும் அலையின் சீற்றத்தையும் கண்டு ரசிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Puducherry