புதுச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி.. அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்...
புதுச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி.. அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்...
புதுச்சேரி - சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி
Puducherry | சுதந்திர போராட்டத்தில் நாடு முழுவதும் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட கண்காட்சியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
புதுச்சேரி பாஜக சார்பில் 75 -வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட கண்காட்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் 150-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், ” சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை வருகின்ற சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சியை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். அதன்படி புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வருங்கால மாணவ மாணவிகள் தெரிந்து கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர் வி,பி. ராமலிங்கம், இப்போது செயலாளர் மோகன் குமார், பட்டியலின பிரிவு தலைவர் தமிழ்மாறன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.