புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் இருந்து பத்துகண்ணு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் மண்ணை கொட்டி சீரமைத்தனர்.
இதுகுறித்து தனியார் கல்லூரி மாணவிகள் கூறுகையில், “இந்த சாலை எங்கள் கல்லூரி அருகே உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளி மாணவ, மாணவர்கள், வயதானவர்கள், வேலைக்கு செல்வோர் விபத்தில் சிக்குவதால் இதனை எங்கள் நண்பர்களுடன் இணைந்து நாங்களே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து சரி செய்தோம். இப்போது யாரும் பயப்படாமல் வாகனத்தில் செல்லும்போது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது” என்று கூறினர்.
அரசும், அதிகாரிகளும் செய்ய வேண்டிய வேலையை கல்லூரி மாணவிகள் செய்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry