புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடலும் ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள் வலையில் அதிகமாக ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை மீன்,"புலாசா" பிடிப்படும். மீன்களின் ராஜா என இம்மக்கள் அந்த மீனை அழைக்கின்றனர். அதிக சுவையும் சத்துக்களும் கொண்ட இந்த மீன் பிடிபடும் போதெல்லாம் ஏலம் விடப்படும். அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்கள் பாராட்டப்படுவார்கள்.
அந்த வகையில் கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 17 ம் தேதி பிடிப்பட்ட மீன் 20,000 ரூபாய்க்கு ஏலம் போனது. அடுத்து செப்டம்பர் 3ம் தேதி இரு மீன்கள் பிடிப்பட்டன. இரண்டு கிலோ எடை கொண்ட மீன் ஒன்று 25,000 ரூபாய்க்கும் மற்றொரு மீன் 23,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் இன்று காலை ஏனாமில் இரு மீன்கள் பிடிப்பட்டன. இவை 8000, 9000 என்ற விலைக்கு ஏலம் போனது. இதனை பொன்னமாண்ட ரத்னம் (Ponnamanda Ratnam) என்ற பெண் மகிழ்வுடன் ஏலம் எடுத்தார். இந்த மீன் வலையில் பிடிபட்டால் வலை வீசிய மீனவருக்கு லாபம்தான். அதனை ஏலம் எடுப்பவருக்கு அதிஷ்டம் என்பது ஏனாம் மக்களின் சொல்வழக்கு ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.