திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றர். நாளை காலை 11.30 அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார்.
தேர்தல் பிரசத்திற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தாரபுரம் தொகுதி வேட்பாளர் எல்.முருகன் உட்பட 13 வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகபாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.