தமழிக சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறார். காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அரக்கோணம் அடுத்த நெமிலி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார் .
அப்பொழுது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தந்தைக்கு மருத்துவ உதவி செய்யாததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாமகவை சேர்ந்த சிலர் திடீரென பிரச்சார வாகனத்தில் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பலத்த பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் இருந்து காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை யை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.