நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியிலுள்ள உருது பள்ளியில் கடந்த 6ம் தேதி 4 மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டனர். அப்போது மாணவிகள் 4 பேரும் திடீரென மயக்கமடைந்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக 4 மாணவிகளும் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அதில் ஜெயினபா (13) என்ற மாணவி
இன்று கோவையில் இருந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அப்போது சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள உருது பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris