முகப்பு /செய்தி /நீலகிரி / உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டெருமை... பீதியில் மக்கள்!

உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டெருமை... பீதியில் மக்கள்!

ஒற்றை காட்டெருமை

ஒற்றை காட்டெருமை

ooty bison | தைப்பூச தினத்தன்று கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டெருமையால் அச்சத்துடன் சாலையிலேயே பதுங்கி நின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாமல் நகர்புறங்களிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் காட்டெருமைகளின் உலா அதிகமாக உள்ளது.

இதனிடையே தைப்பூச திருவிழாவான இன்று எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றவுடன் பக்தர்கள் நிம்மதி அடைந்து கோவிலுக்கு சென்றனர்.

செய்தியாளர்: ஐயாசாமி, உதகை.

First published:

Tags: Local News, Ooty