நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை , நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
இதையடுத்து மாவட்டத்தில் கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு துறை சார்பில் மூன்று சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினர் உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.
இதில் நாற்பத்தி நான்கு பேர் இரண்டு குழுக்களாக தலா ஒரு குழுவிற்கு 22 பேர் வீதம் கூடலூர் , குந்தா ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கூறுகையில், " மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு விரைவாக சென்று மரங்கள் மண்சரிவுகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வோம்” என்றனர்.
Also see...இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்
மேலும் கன மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy Rainfall, National Disaster Management, Nilgiris