நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர், பர்லியார், வண்டிச்சோலை, உபதலை, பேரட்டி , எடப்பள்ளி என 6 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் மேலூர் ஊராட்சி உள்பட ஒரு சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், வளர்ச்சி பணிகளை சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பதால் தரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சந்திரசேகர், என்ஜினியர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டு உள்ளார்.
Also see...சீர்காழியில் பிரபல பைனானஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார்
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் என்ஜினியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coonoor, District collectors, Nilgiris