நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவுத்தேடி சாலைகள், குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள பஜார் பகுதியில் குடியிருப்பு நிறைந்து காணப்படும் பகுதியில் நள்ளிரவில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இந்த காட்சி அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : மூர்க்கம்.. தனிமை.. காடுகளில் தனியாக வலம் வரும் மக்னா யானைகளின் கதைகள்
எனவே குடியிருப்பு நிறைந்த பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோத்தகிரி பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : அய்யசாமி - நீலகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris