பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் வந்த பாம்பினை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக விடுவித்த 4 வயது சிறுமியை கண்டு பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்..
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை ஆலோரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களின் மகள் ஸ்ரீ நிஷா வயது( 4). ஸ்ரீ நிஷா வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டின் வாசலில் நான்கடி நீள பாம்பு ஒன்று வந்துள்ளது.
ஆனால் சிறுமி நிஷா எந்த பதற்றமும் இல்லாமல் அந்த பாம்பினை கையில் நீண்ட நேரமாக வைத்துள்ளார். பாம்பை பார்த்து பயப்படாமல் சிறுமி கையில் தைரியமாக வைத்திருந்தது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு வந்த பாம்பினை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து அந்த சிறுமி விட்டுள்ளார்.
#Also Read : எங்க காணோம்...! டிவியில் கோல்ப் ஷாட்டை பார்த்து பந்தை தேடி அழைந்த நாய் - வைரல் வீடியோ
இதனை அருகே இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.பாம்பினை கண்டதும் அதனை அடித்து கொள்ளும் மக்களிடையே அதனை பிடித்து பாதுகாப்பாக விடுவித்த சிறுமியின் தைரியத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.