முகப்பு /செய்தி /Nilgiris / நீலகிரியில் 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரியில் 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை

கனமழை

School Holiday : கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி  நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காக்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நாளை (14.07.2022) மற்றும் 15.07.2022 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Must Read : ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

மேலும், 16ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Heavy rain, Nilgiris, School Holiday