கேரளா மாநிலம் மலம்புழா அருகே மலை உச்சியில் பள்ளத்தில் சிக்கிய பாபு என்ற இளைஞரை மீட்கும் பணி 45 மணிநேரத்தை கடந்து இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் ராணுவத்தினரால் அவர் மீட்கப்பட்டர்.
ஏற்கனவே காலையில் உணவு மற்றும் குடிநீர் வழங்கிய மீட்பு குழுவினர் கயிறு மூலம் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியின் செங்குத்து மலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது மலை துவாரத்தின் முகத்தில் சிக்கி 45 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிய சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாபுவுடன் தொடர்பில் இருந்த ராணுவத்தினர் பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தனர். அவரிடம் மீட்புக் குழுவினர், “நாங்கள் வந்து விட்டோம், கத்திக் கத்தி ஆற்றலை இழக்க வேண்டாம், தண்ணீர் விரைவில் அவரை வந்து சேரும் என்றும் தெரிவித்துள்ளனர். பாபுவின் இயக்கத்தைக் கண்காணிக்க ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புக் குழுவின் ஒரு பகுதியினர் மேலிருந்து பாபுவை நோக்கி வரவும் இன்னொரு குழு கீழிருந்து மேல் நோக்கிச் செல்லவும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். இறுதியாக தற்போது பாபுவை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
#UPDATE | Babu, the youth trapped in a steep gorge in Malampuzha mountains in Palakkad, Kerala has now been rescued. Teams of the Indian Army had undertaken the rescue operation. pic.twitter.com/kymVOLzPCm
— ANI (@ANI) February 9, 2022
எப்படி நடந்தது?
மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பாபு (23) என்பவர், கடந்த திங்கள்கிழமை எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் தனது மூன்று நண்பர்களுடன் திங்கள்கிழமை மதியம் மலையேறினார். கீழே மலையேற்றம் செய்து கொண்டிருந்த போது, களைத்துப் போன பாபு பிளவில் தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கொடிகள் மற்றும் குச்சிகளை பயன்படுத்தி பாபுவை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாபுவின் நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி, அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
The final moment of Babu's rescue by army and NDRF pic.twitter.com/OVdUHIZVvj
— Dhanya Rajendran (@dhanyarajendran) February 9, 2022
நள்ளிரவில் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் மலம்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வெளிச்சம் இன்மை காரணமாக அவர்களால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இருப்பினும், பாபுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழு அருகிலேயே தங்கியிருந்தது. இரவு நேரத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க, குழுவினர் தீப்பந்தங்களை ஏற்றினர்.
பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ம்ருண்மயி ஜோஷியின் வேண்டுகோளின்படி, கடலோர காவல்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஹெலிகாப்டரால் பாபு சிக்கிய செங்குத்தான சரிவுக்கு அருகில் செல்லவோ அல்லது மலை உச்சியில் தரையிறங்கவோ முடியவில்லை. நிலைமையை அறிந்த கடலோர காவல்படையினர் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் பாபு, தான் சிக்கிய இடத்தை செல்ஃபி மற்றும் புகைப்படங்களை தனது மொபைல் போனை பயன்படுத்தி, தனது நண்பர்களுக்கும் காவல்துறையினருக்கும் அனுப்பியுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இரண்டு நாளாக மலையில் சிக்கித் தவிக்கும் பாபுவுக்கு பெரிய அளவில் உடல்நலக் குறைவு இல்லை என பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது.
கேரளா வனத்துறை ஏற்கெனவே செங்குத்தாக இருக்கும் குரும்பாச்சி மலையில் ஏறும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இப்பகுதியில் காட்டு விலங்குகள் நடமாட்டமும் அதிகம் என்று வனத்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala