முகப்பு /செய்தி /இந்தியா / 1000 கிலோ எடை கொண்ட உலகின் பிரமாண்ட தேசியக்கொடி லே பகுதியில் ஏற்றம்!

1000 கிலோ எடை கொண்ட உலகின் பிரமாண்ட தேசியக்கொடி லே பகுதியில் ஏற்றம்!

 1000 கிலோ எடை கொண்ட உலகின் பிரமாண்ட தேசியக்கொடி லே பகுதியில் ஏற்றம்!

1000 கிலோ எடை கொண்ட உலகின் பிரமாண்ட தேசியக்கொடி லே பகுதியில் ஏற்றம்!

லடாக்கின் லே மலைப்பகுதியில் உலகிலேயே மிக பெரிய காதியாலான இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

  • Last Updated :

மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கில் உள்ள லே மலைப்பகுதியில் கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய தேசிய கொடி ஏற்றப்பட்டது. லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று காலை இக்கொடியை ஏற்றினார்.

225 அடி நீளம் 150 அடி அகலம் கொண்ட மூவர்ண கொடியின் எடை 1,000 கிலோவாகும். இந்திய ராணுவத்தின் 57வது பொறியாளர்

படைப்பிரிவினர் இக்கொடியை தயாரித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளன்று, லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப்பெரிய கதாரால் ஆன கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் தருணம்.

அண்ணலை நினைவு கூறவும் இந்திய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசத்தை கெளரவிக்கும் வகையிலும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

top videos

    கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட இக்கொடி லே பகுதியில் இந்திய ராணுவத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக லேவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    First published:

    Tags: Ladakh, News On Instagram