திருமணத்திற்கு பின் ஜீன்ஸ் அணிய தடை விதித்ததால் கணவரை, மனைவி குத்தி கொலை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட்டின் ஜம்தாரா பகுதியில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணேஷ்வர் டுடு. இவருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதி சம்பவத்தன்று அருகே உள்ள கோபால்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றுள்ளனர். கண்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில், மனைவி புஷ்பாவின் உடை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருமணம் ஆன பின்னர் மனைவி புஷ்பா ஜீன்ஸ் அணிவது முறையல்ல என கணவர் கர்ணேஷ்வர் கூறிவந்துள்ளார். ஆனால், கணவரின் பேச்சை கேட்க மறுத்து புஷ்பா தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்த நிலையில், கண்காட்சிக்கும் புஷ்பா ஜீன்ஸ் அணிந்து வந்தது கணவருக்கு பிடிக்கவில்லை.
வீடு திரும்பிய பின்னர் இருவருக்கும் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சண்டையாக வெடித்துள்ளது. இந்த சண்டை முற்றியதில் மனைவி புஷ்பா தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். கத்தி குத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்த கணவர் கர்ணேஷ்வரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். படுகாயம் காரணமாக அவர் தன்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:
4 மாத குழந்தையை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு.. பெயர் சூட்டு விழாவுக்கு தயாராகியபோது நேர்ந்த துயரம்..
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த கர்ணேஷ்வரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்தார காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.