கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்த கொண்ட நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்லம் கூடுதல் அமர்வு விஸ்மயா கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை, 12.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் 22 பெண் வயது விஸ்மயா. மருத்துவம் படித்த இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண் குமார் என்பவருக்கும் 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, மாப்பிள்ளை கிரண் குமாருக்கு 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை வரதட்சணையாகத் தந்துள்ளார்.
இவ்வளவையும் பெற்றுக்கொண்ட பின்னருக்கு கிரண் குமார், தனக்கு கார் பிடிக்கவில்லை எனவே தனக்கு ரூ.10 லட்சம் பெண் வீட்டார் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். தன்னால் இனிமேல் பணம் தர முடியாது என பெண்ணின் தந்தை கூறவே, மனைவி விஸ்மயாவை கணவர் கிரண் குமார் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி மர்மான முறையில் விஸ்மயா வீட்டில் உயிரிழந்துள்ளார். இதற்கு முதல் நாள் தான் விஸ்மயா கணவர் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் உறவினருக்கு பகிர்ந்துள்ளார். கேரளாவையே உலுக்கிய இந்த வரதட்சணை கொடுமை சம்பவத்தை அடுத்து, கிரண் குமார் கைது செய்யப்பட்டார். அவரை அரசு பணியில் இருந்து மாநில அரசு டிஸ்மிஸ் செய்தது.
மேலும் படிக்க: பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 9 பேர் பலி... கர்நாடகாவில் சோகம்
கிரண்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கில் கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 04 B, 306, 498 A ஆகிய பிரிவுகளில் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் தண்டனை விபரங்களை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தது.
அதன்படி, விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 12.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.