உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் மித்தவ்லி என்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஹிராலால் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். லக்கிம்பூர் மாவட்ட சிறையில் அடைக்க இருசக்கர வாகனத்தில் ஹிராலாலை போலீசார் அழைத்துச் சென்றனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப பைக்கை நிறுத்தியபோது, திடீரென ஹிராலால் கைவிலங்குடன் தப்பி ஓடினார்.
#WATCH Lakhimpur Kheri: An accused, who was sent to Police custody after being booked under POCSO Act, flees from a petrol pump while the vehicle in which he was being taken to police station was being refuelled. (13.09.2020) pic.twitter.com/nyhiemlLey
— ANI UP (@ANINewsUP) September 14, 2020
தப்பி ஓடியவரை பிடிக்க போலீசார் விரட்டி ஓடினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஹிராலாலைப் பிடித்துவிடுவோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: POCSO case, UP police