நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வு வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு, மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகர் வரை செல்லும் வந்தே பாரத் மீது மீண்டும் மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை-காந்திநகர் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை தொடங்கி இரு மாதங்களில் நான்காவது முறையாக மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று குஜராத் மாநிலம் உத்வதா மற்றும் வாபி இடையே பயணித்துக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயிலின் முன்பகுதி லேசான சேதமடைந்துள்ளது. 15 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு வேறு ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்ற ஆய்வு செய்யப்பட்டது. இயக்க கோளாறு ஏதும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் ரயில் மீண்டும் புறப்பட்டது. ரயில் காந்திநகர் அடைந்த பின்னர் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் சரி செய்யப்படும் என மேற்கு ரயில்வேயின் தலைமை பிஆர்ஓ சுமித் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, குஜராத்தின் அக்டோபர் 6ஆம் தேதி மணிநகர் பகுதியிலும், அக்டோபர் 8ஆம் தேதி ஆனந்த் பகுதியிலும் வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்பட்டன. அதேபோல் அக்டோபர் மாத இறுதியிலும் அதுல் என்ற பகுதியில் இதே போல் விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரூ.40 லட்சம் அபேஸ்.. பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை நம்பி பெண்ணின் மோசடியில் சிக்கிய நபர்!
இது போன்ற விபத்துக்களை தடுக்கும் விதமாக நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் சுமார் 1,000 கிமீ தூரம் சுற்றுச்சுவர் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கடந்த மாதம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat, Indian Railways, Vande Bharat