உத்தரபிரதேசத்தில் மகளின் தலையை துண்டித்து தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்டோய் மாவட்டத்தை சேர்ந்த சர்வேஷ் குமாரின் 17 வயது மகள், அதேபகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த சர்வேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
மகளின் தலையை துண்டித்து கொன்ற தந்தை
அதன்பிறகு மகளின் தலையை கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார். தகவலறிந்து வந்த போலீசார், சர்வேஷ்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.