யு.பி.எஸ்.சி தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

உச்ச நீதிமன்றம்
- News18 Tamil
- Last Updated: September 30, 2020, 2:08 PM IST
யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்தது. மேலும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக விளக்கமும் அளித்தது.
நீட். ஜே.இ.இ தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததை போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைத்தால் வழக்கமாக பின்பற்றிவரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி இன்று தனது தரப்பு பதிலைத் தாக்கல் செய்தது. தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று யுபிஎஸ்சி நிர்வாகம் கூறியதை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்தது. மேலும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக விளக்கமும் அளித்தது.
நீட். ஜே.இ.இ தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததை போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைத்தால் வழக்கமாக பின்பற்றிவரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி இன்று தனது தரப்பு பதிலைத் தாக்கல் செய்தது.