சமீபத்தில் பாஜகவில் இணைந்த அபர்னா யாதவ், தனது மாமனாரும், எதிர்கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவை நேரில் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நாட்டிலேயே அதிக சட்டமன்ற இடங்களை உள்ளடக்கிய உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7 கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலேயே அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தேர்தலாக உத்தரப் பிரதேசம் விளங்குகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜகவுக்கு கடுமையான சவால் அளித்து வருகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி.
நிலைமை இப்படியிருக்க யோகி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என வரிசையாக சிலர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் கடந்த வாரம் இணைந்தது பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்துவதாக இருந்தது.
Also read:
கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ
இருப்பினும் இந்த வாரம் சமாஜ்வாதி கட்சிக்கு இரட்டை அதிர்ச்சி அளித்தது பாஜக. அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர்களையே வளைத்துப் போட்டு சமாஜ்வாதி கட்சிக்கு பேரதிர்ச்சியுடன் பதிலடி தந்தது பாஜக. முலாயம் சிங் யாதவின் மகனும், அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவின் மனைவியுமான அபர்னா யாதவ், முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தாவின் சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பிரமோத் குப்தா ஆகிய இருவரும் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர்.
Also read:
ஆட்டம் காட்டிய நைட்டி திருடன் - பல கிமீ சேஸிங் செய்து பிடித்த போலீஸார்
இந்நிலையில், பாஜகவில் இணைந்த அபர்னா யாதவ், இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்று லக்னோ திரும்பிய நிலையில் தனது மாமனாரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவை நேரில் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அபர்னா பகிர்ந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.