கள்ள காதலுக்கு ஆட்சேபம் தெரிவித்த மகனை பெற்ற தாய் தனது காதலன் மற்றும் இளைய மகனை வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மோடி நகர் பகுதியைச் சேர்ந்த அனுஜ் குமார் என்ற 27 வயது நபரை கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி அஞ்சலி காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நிவாரி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் அனுஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வு செய்த காவல்துறை சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையின் போது உயிரிழந்த அனுஜ் குமாரின் மனைவி அஞ்சலி தனது மாமியாரும் அனுஜ்ஜின் தாயாருமான கிருஷ்ணா தேவி மற்றும் அனுஜ்ஜின் இளைய சகோதரர் அபிஷேக் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அனுஜ்ஜின் தாயார் கிருஷ்ணாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தேவேந்திரா என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததுள்ளது. இந்த விவகாரம் மூத்த மகன் அனுஜ்ஜிற்கு தெரிய வரவே, தாயாரை அவர் கண்டித்துள்ளார்.இதை தாங்கிக்கொள்ள முடியாத தாயார் கிருஷ்ணா தேவி மகன் அனுஜ்ஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
பெற்ற தாயே மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது மாடியில் இருந்து வீசி கொலை செய்த கொடூரம்.. பெங்களுரூவில் அதிர்ச்சி சம்பவம்..
அதன் அடிப்படையில் தேவேந்திரா மற்றும் இளைய மகன் அபிஷேக் உதவியுடன் அனுஜ்ஜை கொலை செய்து உடலை பொது இடத்தில் தூக்கி வீசியுள்ளனர். இதைத் தொடர்ந்து தாய் கிருஷ்ணா தேவி, இளைய மகன் அபிஷேக்கை கைது செய்த காவல்துறை தப்பியோடிய காதலன் தேவேந்திராவைத் தேடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.