பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மட்டும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டப் பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரித்துக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மாநில அளவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தன.
இந்தநிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக மட்டும் மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்டத்துறை அமைச்சர் பிராஜேஷ் பாதக், ‘பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்குமட்டும் மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
144 நீதிமன்றங்கள், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்யும், 74 நீதிமன்றங்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கும். இந்த விரைவு நீதிமன்றங்களுக்காக கூடுதல் அமர்வு நீதிபதிகள் பணியிடங்கள் உருவாக்கப்படும். நீதிமன்றத்துக்கு உதவியாளர்களுக்கான பணியிடங்களும் உருவாக்கப்படும். இந்த நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான 60 சதவீத நிதி மத்திய அரசிடமிருந்து பெறப்படும். 40 சதவீத நிதி மாநில நிதியிலிருந்து செலவிடப்படும். ஒரு விரைவு நீதிமன்றத்துக்கான செலவு 63 லட்ச ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.