முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாகவும், அவரது கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

அதானி குழுமத்தின் மீது மோசடி புகார் எழுந்துள்ள நிலையில், நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்த படம் ஒன்றை காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் காட்டமாக விமர்சித்தார். அதில், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார்.

இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சபாநாயகரிடம் முறையிட்டார். நாடாளுமன்ற விதிகளின்படி, எம்பிக்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காமல், எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது என்றார். ஆனால், ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாகவும், அவரது கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி வழங்கிய நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால், ஆத் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முந்தைய அரசாங்கங்கள் செய்த பணிகளைக் கண்டு நீங்கள் ஏன் பொறாமைப்படுகிறீர்கள் என்று அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த பணிகள் குறித்த 10 பக்க ஆவணத்தை கார்கே காட்டினார்.

இதனிடையே, அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி ஆத் ஆத்மி, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

First published:

Tags: BJP, Modi, Rahul gandhi, Tamil News