காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என இந்தியாவை ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகளை மீறும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கவலை தருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் மிசெல் பசெலேட் கூறியுள்ளார்.
Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (10-09-2019) மின்தடை எங்கெங்கே?
இது தொடர்பாக 42வது மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவை இந்தியா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பாகவும் காஷ்மீர் மக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Article 370, Kashmir