ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று பிரதமர் மோடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநில முதலமைச்சர்களிடம் பேசினார். அந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்ட விவகாரம் குறித்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 15-ம் தேதியே ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் முழுமையாக நீக்கிவிடக் கூடாது என்று பிரதமர் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.