இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இரு நாட்டு அமைச்சர்கள் ஏப்ரலில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோதம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்புக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் இருநாட்டு அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு எட்டப்படும் என்றார்.
Also Read : ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை... சக மாணவர் அதிரடி கைது... நடந்தது என்ன?
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fishermen, L Murugan, Srilanka Army