மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கி மற்றும் பிங்கி பட்கோங்கர் இரட்டைச் சகோதரிகள். குழந்தை பருவத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்த இவர்கள் திருமணம் ஆனால் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து வெவ்வேறு இடத்திற்கு வேண்டி வருமே. இந்த பிரிவு வேண்டாம் என்று நினைத்த இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளின் விசித்திரமான கோரிக்கைக்கு அவர்களது குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு நன்றாக பரிச்சயமான மலுங்கில் வசிக்கும் அதுல் உத்தம் ஆடடேவிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவரும் சம்மதிக்கவே கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
மெட்ரோ ரயிலில் கொட்டிய உணவு... துடைத்து சுத்தம் செய்த மாணவன்.. குவியும் பாராட்டு!
அதன்படி, வெள்ளி மதியம் மதியம் 12.30 மணியளவில் முதல் திருமணத்தில் 36 வயதான ரிங்கி பட்கோங்கரை மணந்துள்ளார். பின்னர் ரிங்கியின் சகோதரி பிங்கி பட்கோங்கரையும் கலண்டே ஹோட்டலில் நடைபெற்ற அதே திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் மூவரும் நிற்கும் படியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. திருமண வீடியோவும் இணையத்தில் ஹிட்டடித்தது.
ஒருபுறம் சோஷியல் மீடியா வைரல் என்றாலு மற்றொரு புறம் சர்ச்சையும் கிளம்பியது. ஒரு மனைவி இருக்கும் போது மற்றொரு மனைவியை மணக்க கூடாது என்று சட்டம் சொல்வதாகவும் இப்படி ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா, இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் அள்ளி வீசத் தொடங்கினர்.
ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு முதல் வெற்றி.. பணிந்தது ஈரான் அரசு!
அதோடு உள்ளூர் வாசியான ராகுல் பாரத் என்ற நபர் இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் புகாரின் அடிப்படையில், மணமகன் அதுல் உத்தம் அவுடாடே மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர் மீது ' கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது மற்றொருவரை மணப்பது சட்டப்படி குற்றம் 'என்று வரையறை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, இந்த குற்றவாளிக்கு 7 வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 என்பது இருதார திருமணம் பற்றியதாகவும்.
சட்ட விதியின்படி, வாழ்க்கைத்துணை உயிரோடு இருக்கும் போது இன்னொரு வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்வது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது, சட்டப்படி விவாகரத்து வாங்கியபின் செய்து கொள்ளும் இரண்டாவது கல்யாணம், சிவில் டெட் எனப்படும் 7 ஆண்டுகள் ஒரு நபர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியாத நிலையில் செய்யும் இரண்டாம் திருமணத்துக்கு இந்த சட்டப்பிரிவு பொருந்தாது. அதேவேளையில் முதல் துணையின் ஒப்புதலோடு திருமணம் நடந்தால் சிக்கல் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. ஆனால் வழக்காகவோ, நீதிமன்ற படியேறியோ வழக்கு தொடரப்பட்டால் சம்பந்த நபர் மீது சட்டம் பாயும் என்பதே விதி.
இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா திருமணத்தின்படி, மணமக்கள் மூவருமே மன விருப்பத்தின்படியே இந்த திருமணத்தை செய்துள்ளனர். மூன்றாவது நபர் கொடுத்த புகாரே வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மணமகன் சட்டப்படி தண்டிக்கப்படுவாரா என்பதை சட்ட விதிகளின்படி நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Marriage, Solapur S13p42