டி.ஆர்.பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விகாஸ் காஞ்சன்தனியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி முறையில் மோசடி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் ரிபப்ளிக் டிவி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களது குழுமம் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி ரிபப்ளிக் டிவி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ரிபப்ளிக் டிவியின் தலைமை செயல் அதிகாரி விகாஸ் காஞ்சன்தனியை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.