திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரமாக காத்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் துவங்கிவிட்ட நிலையில் ஆயுத பூஜை, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக திருப்பதி மலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளனர்.
இதனால், திருமலையிலுள்ள பக்தர்கள் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருப்பு மண்டபத்திலுள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் நிறைந்துள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் சாமி தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, டீ, காபி, பால் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.
Published by:DS Gopinath
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.