திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகே உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகையில் அறை ஒன்றுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை 1,700 ஆக தேவஸ்தான நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
சிறப்பு வகை தங்கும் விடுதிகளுக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2,200 ஆக விலை அதிகரித்துள்ளது. அறைகளின் வாடகையை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati temple