திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் நிறைவு நாளான இன்று, கோவில் திருக்குளத்தில் ஏழுமலையான் சக்கர ஸ்நானம் செய்தார்.
திருமலை திருப்பதியில் கடந்த 9 நாட்களாக பிரமோற்சவம் திருவிழா நடந்து வருகிறது. நேற்று குதிரை வாகனத்தில் காட்சியளித்த ஏழுமலையானை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை உற்சவர் மலையப்ப சுவாமி பூதேவி சமேதரராக கோவிலில் இருந்து புறப்பட்டார்.
அதன்பின் மாட வீதிகள் வழியாக வராக சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் அனைவரும் பக்கதியுடன் கோவிந்தா கோவிந்தா என பரவசமாக முழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்திற்கு அழைத்துச் சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள், அவரை ஸ்நானம் செய்ய வைத்தனர். தொடர்ந்து திருக்கோலத்தில் நான்கு புறங்களிலும் காத்திருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து, இன்று இரவு நடைபெறும் கொடியிறக்கத்துடன் திருப்பதி வருடாந்திர பிரமோற்சவம் நிறைவடைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.