முகப்பு /செய்தி /இந்தியா / பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்... அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து..!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்... அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து..!

பசுக்கள்

பசுக்கள்

பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காகவும் அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Allahabad, India

உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் காலிக் என்ற மனுதாரர் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பசுவதை செய்த குற்றத்திற்காக தன் மீது காவல்துறை எந்த வித ஆதாரமும் இன்றி வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, தன் மீதான வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

இதையும் படிங்க; வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை - டிஜிபி சைலேந்திரபாபு

இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி ஷாமிம் அகமது மேற்கொண்டார். குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை அவர் பிறப்பிக்கும் போது கூறிய சில கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன. நீதிபதி தனது உத்தரவில், பசு சிவன், இந்திரன், கிருஷணர் போன்ற பல கடவுள்களுடன் தொடர்புடைய விலங்கு. பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதத்தையும், முகம் சந்திர, சூரியனையும், தோல்கள் அக்னியையும் குறிப்பவை.

தன்மூலம் பல ஊட்டசத்துக்களை தரும் பசுவை தாயாகவும் பூமி தாயுடனும் நாம் பொருத்திப் பார்க்கிறோம். 20ஆம் நூற்றாண்டு காலத்திலேயே பல ராஜ்ஜியங்களில் பசு வதை அமலில் இருந்துள்ளது. பசுவை கொலை செய்பவர்களும், அதை கொலை செய்ய அனுமதிப்பவர்களும் அவர்கள் உடலில் எத்தனை முடிகள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள் நரகத்தில் உழல்வார்கள்.

பசுவை போலவே காளையும் மதிப்பு மிக்க விலங்கு. அது சிவபெருமானின் வாகனம். இத்தனை சிறப்பு கொண்ட பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காகவும் அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசு செய்யும் என நீதிமன்றம் நம்புகிறது" என நீதிபதி அகமது தனது உத்தரவில் கூறியுள்ளார்.

First published:

Tags: Allahabad, Anti cow slaughter bill, Cow, Cow Slaughter