புதன்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட TATA CNG பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதக் காலத்தில் தொடர்ந்து 3 ஆவது முறையாக TATA CNG பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பயணியர்களின் நலன் கருதி உடனடியாக மும்பை சாலையில் பயன்பாட்டில் உள்ள 400 TATA CNG பேருந்துகளைத் திரும்பிப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மும்பை போக்குவரத்துக் கழகம் ( BEST),தற்போது ஏற்பட்டது போல் ஜனவரி 25 ஆம் நாள் மற்றும் பிப்ரவரி 11 ஆம் நாள் என்று இரண்டு முறை CNG பேருந்துகள் தீப்பற்றியுள்ளது.
தீ விபத்தினால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற கோளாறுகள் ஏற்படுவதால் அனைத்து TATA CNG பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஒரு வகையாகப் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாதேஸ்வரி லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தின் பராமரிப்பு மற்றும் இதர தேவைகளை ஒப்பந்த பெற்ற நிறுவனங்களே பொறுப்பேற்று செய்ய வேண்டும் என்ற நிலையில் மும்பை போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை நிருத்தி சரிபார்ப்பு அனுப்பியுள்ளனர்.
மும்பை போக்குவரத்துக் கழகம் தினசரி சுமார் 35 லட்சம் பயணிகளைக் கொண்டு இயங்கிவருகிறது. 3,619 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அதில் 2,927 பேருந்துகள் CNG மூலம் இயங்கும் வாகனங்கள் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Bus accident, Mumbai