அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் உள்ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகவும் மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு, தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தனி ஒதுக்கீடு அல்ல என்றும், உள்ஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, ஏற்கெனவே மருத்துவ படிப்புகள் தொடர்பான சேர்க்கை நடைபெற்று வருவதால், தற்போது இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவை பிறப்பிக்க முடியாது என அறிவித்தது.
வழக்கு குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்பதால் 2020 -21 கல்வியாண்டில் மட்டும் உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் நடப்பாண்டு தமிழகத்தின் 25 மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 586 இடங்களில் உள்ஒதுக்கீடு ரத்தாகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த முழு விவரம் இன்று மாலை வெளியாகும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.