சர்ச்சைக்கு பெயர்போன நடிகை அனுஷ்யா பரத்வாஜ் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருப்பவர் அனுசுயா பரத்வாஜ். வில்லனின் மனைவியாக தாட்ஷாயினி கேரக்டரில் தலையில் கிராப் காட், வாயில் வெற்றிலை, கையில் பிளேடு என அவரது நடிப்பு ரசிக்க வைத்தது. இதனால், புஷ்பா திரைப்படத்தின் 2-வது பாகத்திலும் நடிகை அனுசுயா வில்லியாக நடிக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி சின்னத்திரை நடிகையாகி, தற்போது வெள்ளித்திரையில் முக்கிய நடிகையாக பெயரெடுத்துள்ளார் அனுசுயா. ரசிகர் ஒருவர் நடிகை அனுசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார் அனுசுயா.
பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் போலீசில் புகார் அளிக்க விவகாரம் பெரிதானது. மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்து இருந்தார் நடிகை அனுசுயா. இதில் ஆத்திரம் அடைந்த தேவரகொண்டா ரசிகர்கள் அனுசுயாவை கிண்டல் செய்து வெளியிட்ட மீம்ஸ்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் இயக்க தயாரான திருமுருகன்!
விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ‘ஆண்டி’ என நடிகை அனுசுயாவை அழைக்க அவர் டென்சனாகி விட்டார். என்னை யாராவது ஆண்டி என அழைத்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என அனுசுயா எச்சரிக்க அதன் பின்னரே தேவரகொண்ட ரசிகர்கள் அடங்கினர். பின்னர் நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோகிராபி படத்திலும் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்து பின்னர் அடங்கியது.
இந்த விவகாரத்திலும் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார் அனுசுயா. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அனுசுயாவை மேலும் ஒரு சர்ச்சை தேடி வந்துள்ளது. நடிகை அனுசுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் சில மாதங்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்தன. இதை நண்பர்கள் மூலம் தாமதமாக அறிந்து கொண்ட அனுசுயா, ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: மெழுகு பொம்மை போல இருக்கும் தமன்னா..! லைக்ஸ் அள்ளும் படங்கள்..
புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்தனர்.துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார் வெங்கட்ராஜு. சொந்த ஊருக்கு திரும்பியவர் பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ரசிகராக வெங்கடராஜு இருப்பாரோ? அதனால்தான் அனுசுயா படங்களை ஆபாசமாக வெளியிட்டாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Crime News, Tamil News