தெலங்கானாவில், திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாம் பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் ரவளி. எம் சி ஏ படித்த ரவளிக்கும் மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும் இன்று நவிபேட்டில் உள்ள திருமண மண்டப ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு ரவளி வருங்கால கணவன் சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
அதன்பின் அதிகாலை 4 மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சென்ற ரவளி திருமணத்தன்று அணிந்து கொள்வதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரவளியை காணாமல் தேடிய உறவினர்கள் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர்.
இதையும் படிங்க | ஷ்ரத்தா கொலை வழக்கில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் தயார் - டெல்லி காவல்துறை தகவல்
இது பற்றி தகவல் இந்த நவிபேட் போலீசார் விரைந்து சென்று ரவளி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நிஜாமா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தபின் மணமகன் சந்தோஷ் தொலைபேசியில் ரவளியை கொடுமை செய்ததாக ரவளியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் பேசும் போது திருமணத்திற்கு பின் நீ வேலைக்கு போக வேண்டும், உங்கள் குடும்ப சொத்தில் உனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரவளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Suicide, Telangana