கொரோனா நோய்க்கு எதிராக மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கும் அதே வேளையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான அரசின் அதிகாரத்தில் ‘தலையிடுதல்’ என கருதக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
‘தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க ஆர்வமுள்ள நபர்கள், தடுப்பூசி போடுமாறு யாரும் உடல்ரீதியாக வற்புறுத்தாமல் அதனை தவிர்க்கலாம். எவ்வாறாயினும், அத்தகைய நபர்கள் மற்றவர்களுக்கு தொற்றுநோயைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அல்லது அந்த வைரஸின் பிறழ்வு மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பைச் சுமைப்படுத்துவதற்கு பங்களிக்கும் சூழ்நிலை அமைந்தால், அதன் மூலம் பொது சுகாதார உள்கட்டமைப்பு பெருமளவில் பாதிக்கிறது. இதன் பாதுகாப்பு சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமானது-- தொற்றுநோய்க்கு எதிரான இந்தப் போரில், நியாயமான மற்றும் நிறைவேற்றப்பட விரும்பும் ஒரு பொருளுக்கு விகிதாசாரமான தனிப்பட்ட உரிமைகள் மீது சில வரம்புகளை விதிப்பதன் மூலம், இதுபோன்ற பொது சுகாதார பிரச்சனைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும்’ என்று தீர்ப்பை எழுதிய நீதிபதி ராவ் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க | உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் குறிவைக்கப்படுகிறார்கள்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மேலும், பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போடாத நபர்களை பாரபட்சமாக நடத்துவதை சுட்டிக்காட்ட, தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் எந்த அறிவியல் ஆதாரங்களையும், தரவுகளையும் முன் வைக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.