போதிய தேவை இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
“தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளது. 20 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. காலாவதி ஆகிவிடும் என்பதால் உற்பத்தியை நிறுத்த கூறிவிட்டேன். இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்
கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்த தேதியில் இருந்து 9 மாதங்கள் வரை பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு மையம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Covishield