ஆந்திராவில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஆதிமுலாபு சுரேஷ் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை செப்டம்பர் 5ம் தேதி திறக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கப்படும் என்று கூறிய அவர், இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.