ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முடிவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முடிவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ஜம்மு காஷ்மீர்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாகவும், இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இரு அவைகளிலும் நிறைவேற்றினார். அதனையடுத்து, அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து அந்த மசோதா நடைமுறைக்குவருகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாகவும், இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. பத்து மனுதாரர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வில் ஆஜரானார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கோரப்பட்டது.
அந்த வழக்கில் பதிலளித்த நீதிபதிகள், ‘நீதிமன்றத்தால் கடிகாரத்தை பின்னோக்கி இழுக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தைக் கோராமல் எதுவும் செய்யமுடியாது. இதுதொடர்பாக, மத்திய அரசு நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இதுதொடர்பான வழக்கை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.