முகப்பு /செய்தி /இந்தியா / RIL AGM 2021: ரிலையன்ஸின் ஒவ்வொரு ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றினார்கள் - முகேஷ் அம்பானி

RIL AGM 2021: ரிலையன்ஸின் ஒவ்வொரு ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றினார்கள் - முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

2021ம் நிதியாண்டின் வருடாந்திர அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைகளுக்காக 1,140 கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஒவ்வொரு ரிலையன்ஸ் ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றியதாக கூறினார்.

சந்தை மூலதனத்தால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

ரிலையன்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரும் பங்கெடுத்தனர். ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் அனைத்து ஊழியர்களும் நோக்கம் மற்றும் தேசிய கடமை உணர்வுடன் செயலாற்றினார்கள் என தெரிவித்தார்.

Also Read:   ஜியோ இன்ஸ்டிடியூட் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் - நீடா அம்பானி அறிவிப்பு!

2021ம் நிதியாண்டின் வருடாந்திர அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைகளுக்காக 1,140 கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைகளின் மூலதனமாக விளங்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளையானது, இந்தியாவின் முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையை மும்பை மாநகராட்சியுடன் இணைந்து உருவாக்கியது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரம் காட்டிய போது, நாட்டிற்கு உதவும் வகையில் ரிலையன்ஸ் போர்க்கால அடிப்படையில் செயலாற்றியதாக நீடா அம்பானி தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் இந்தியா முழுதும் தடையில்லாத ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது ரிலையன்ஸ் தனது ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை தொடங்கியதுடன் அதனை துரிதப்படுத்தி இன்று மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியில் 11%-க்கும் மேல் ரிலையன்ஸின் தயாரிப்பாக மாற்றியுள்ளதாகவும், நாட்டில் 10-ல் ஒரு கொரோனா நோயாளிக்கு நாங்கள் ஆக்ஸிஜன் சப்ளை செய்வதாகவும், 100 மெடிக்கல் கிரேடு கண்டெய்னர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பெற்றிருப்பதாகவும், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களை அமைத்துத் தந்திருப்பதாகவும் நீடா அம்பானி தெரிவித்தார்.

First published:

Tags: Mukesh ambani, Nita Ambani, Oxygen, Reliance, Reliance AGM 2021, Reliance Foundation, Reliance Jio, Reliance Retail