பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று வெளியாகும் செய்திகள் தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: January 25, 2021, 4:34 PM IST
போலி நோட்டுகளின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது, ரிசர்வ் வங்கி (Reserve Bank) பழைய தொடர் கரன்சி நோட்டுகளை நிறுத்தி புதிய நோட்டுகளை கொண்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு நிறுத்தப்படும் பழைய நோட்டுகள் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நோட்டுகளின் மதிப்பிலான பணத்தை வங்கி உங்கள் கணக்கில் மீண்டும் பரிமாற்றம் செய்யும், அல்லது புதிய நோட்டுகளாக வங்கி மாற்றிக்கொடுக்கிறது.
இந்தியாவில் தற்போது புழகத்தில் இருக்கும் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது என்று ஊடகங்களில் கடந்த சில தினங்களில் செய்திகள் வெளியாகின. ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுச்செயலாளர் பி.மகேஷ் தெரிவித்ததாக இந்தச் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் செய்தி தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விரைவில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவுள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்தியாவில் தற்போது புழகத்தில் இருக்கும் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது என்று ஊடகங்களில் கடந்த சில தினங்களில் செய்திகள் வெளியாகின. ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுச்செயலாளர் பி.மகேஷ் தெரிவித்ததாக இந்தச் செய்திகள் வெளியாகின.
With regard to reports in certain sections of media on withdrawal of old series of ₹100, ₹10 & ₹5 banknotes from circulation in near future, it is clarified that such reports are incorrect.
— ReserveBankOfIndia (@RBI) January 25, 2021
இந்தநிலையில், பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் செய்தி தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விரைவில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவுள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்