தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசினார். அப்போது தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ. 40ல் இருந்து ரூ. 90 ஆகவும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ. 1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.
தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மூலப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம், GST, உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் - (1/2) pic.twitter.com/sNVIAfr8YX
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 12, 2022
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறிய கனிமொழி எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.