முகப்பு /செய்தி /இந்தியா / எதிர்ப்பு முதல்வருக்கு மட்டுமே ; கட்சிக்கு இல்லை - சச்சின் பைலட் தரப்பு வாதம்

எதிர்ப்பு முதல்வருக்கு மட்டுமே ; கட்சிக்கு இல்லை - சச்சின் பைலட் தரப்பு வாதம்

சச்சின் பைலட்

சச்சின் பைலட்

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது வெள்ளிக்கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏ-க்களுக்கு, தகுதிநீக்க நோட்டீஸை சபாநாயகர் அனுப்பிவைத்தார். இதனை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சச்சின் பைலட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி,  அவசரகதியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், பதில் அளிக்க சட்டப்படி 7 நாட்கள் அவகாசம் கொடுக்காமல் வெறும் 3 நாட்களே அவகாசம் அளித்ததாகவும் வாதாடினார்.

மேலும், சச்சின் பைலட் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கட்சிக்கு எதிராக செயல்படவில்லை எனவும் கூறினார். கட்சிக்கு எதிரான அறிக்கை மற்றும் கட்சி கூட்டத்தை புறக்கணித்ததே, அவர்கள் கட்சியில் இருந்து தன்னிச்சையாக விலகியதற்கு சான்று என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க...

இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்த முயற்சி - ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் 6 பேர் கைது

கட்சியிலிருந்து விலகிவிட்டார்கள் எனக் கூறும் நீங்கள், மீண்டும் எப்படி அவர்களை கட்சியிலிருந்து நீக்கினீர்கள் எனக் கேட்ட நீதிபதிகள், சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறி தீர்ப்பை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Rajasthan, Sachin pilot