”பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. பழியை எப்படித் தவிர்ப்பது என்று மூளையைக் கசக்காமல் நிர்மலா சீதாராமன் மீது பழிபோட்டால் பிரச்சனை தீர்ந்தது” என்று ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
2020 பட்ஜெட் எந்த பயனையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் இதில் இல்லை என்று ராகுல் காந்தி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். பட்ஜெட் குறித்து இன்று ட்வீட் செய்திருக்கும் ராகுல், “
அன்புள்ள பிரதமரே, பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இதற்கு உங்கள் மீது விழுந்திருக்கும் பழியை எப்படித் தவிர்ப்பது என மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஒரு யோசனையும் இல்லாமல் பயன்படாத ஒரு பட்ஜெட்டை நிர்மலா ஜி சமர்ப்பித்திருக்கிறார். அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள். பிரச்சனை தீர்ந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். "
இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கவனம் செலுத்தப்பட இருக்கிறது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு. இந்த பட்ஜெட் மக்களின் வருமானம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பட்ஜெட்டாக இருக்கும். மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்" என்று நிர்மலா சீதாராமன் என தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார் சீதாராமன்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.