வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண் கைவரிசை... 16 சவரன் நகை கொள்ளை - மடக்கிப் பிடித்த போலீஸ்
வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண் கைவரிசை... 16 சவரன் நகை கொள்ளை - மடக்கிப் பிடித்த போலீஸ்
வளர்மதி
Puducherry: வாடகைக்கு வருபவர்களின் விபரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் வீடு வாடகை எடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டில் 16 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற தமிழகத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
புதுச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி (38), இவர் ரங்கபிள்ளை வீதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (37) சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தங்களது வீட்டில் கடந்த 22 ஆம் தேதி 16.5 சவரன் தங்க நகை திருட்டு போய் இருப்பதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுப்ரமணியின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் 1 மாத காலத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக மாடியில் குடியிருந்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி என்கிற பெண் ஒரு மாத காலம் தங்கி இருந்தது தெரியவந்தது.
காலாபட்டில் நண்பர் வீட்டில் தங்கி இருந்த வளர்மதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் வளர்மதி ஒரு மாத காலம் வீட்டில் தங்கிய போது கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதும் சுப்ரமணியின் தாயார் வீட்டை திறந்து வைத்து விட்டு அக்கம் பக்கத்தில் பேசி கொண்டு இருப்பதையும் அறிந்து கொண்டு, வாடகை இருந்த வீட்டை காலி செய்து விட்டு சென்ற வளர்மதி கடந்த 21 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சுப்ரமணி வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 16.5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதாக ஒப்பு கொண்டார்.
இதனை தொடர்ந்து வளர்மதி திருடி சென்ற நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வாடகைக்கு வருபவர்களின் விபரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.