புதுச்சேரி நகராட்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டதாகவும், அவற்றை அகற்றக்கோரி புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு கடந்த வாரம், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் அகற்றப்பட்டதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேனர்களை அகற்றியதற்கான செலவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க:ஒரே நாளில் ‘ஓஹோ’ என மாறிய வாழ்க்கை... ஏழை விவசாயிக்கு சுரங்கத்தில் அடித்த ஜாக்பாட்!
இந்நிலையில், பேனர்கள் அகற்றப்படவில்லை என ஜெகன்னாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரியில் சட்ட விரோதமாக 2,500 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் ஒப்பந்த முறையில் ஒப்பந்ததாரர்களால் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை எனக் கூறி, மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, சட்ட விரோதமாக பேனர் வைப்பது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள், அவற்றை அகற்ற வேண்டுமெனவும், அகற்றியது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banners, BJP, Puducherry